Thursday, 24 July 2008

kaddaiparichan bridge1989-கட்டைபறிச்சான் சின்ன பாலத்தின் மாற்றொரு அழகிய தோற்றம்


Canaiyoor m.m.v 1989-சேனையூர் மத்திய கல்லூரி

1957இல் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி2007ல் பொன் விழாக்கண்டது.பொன்விழாவை கொண்டாட முடியாத நிலையில் இன்று பாடசாலைக்கு என்ன நேர்ந்தது என்ற தகவலையும் அறிய முடியாமல் உள்ள்ளது.2006ல் ஏற்பட்ட இடப்பெயர்வு இன்னும் முற்றுப்பெறவில்லை.

chanaiyoor-kadaiparichan river-சேனையூர் கட்டைபறிச்சான் ஆறு

ஊரைச்சுற்றி வரும் இந்த ஆறும் அதனோடு இணைந்த கண்டல் தாவரங்களும் அழகின் சிரிப்பாய் நம்மை ஆகர்சித்து செல்லும்.

kaddaiparichan bridge-கட்டைபறிச்சான் பாலம்


கட்டைபறிச்சான் சின்னப்பாலம் இங்கிருந்து விரியும் பாதை ஊரோடிணைந்த குடியிருப்புகளையும் வளமான வயல் நிலங்களையும்,காட்சிப்புலமாக கொண்டுள்ளது.இந்தப்பாலத்தை தாண்டி கச்சக்கொடி மலை காணப்படுகிறது.வரலாற்று சிறப்புமிக்க இந்தமலையில் கிறிஸ்துவுக்கு முற்
பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்னுள்ள வரலாறு நிருபணமாகிறது.

நாகதம்பிரான் ஆலையம்

இங்கு வைகசி விசாகப் பொங்கல் விசேசமானது.வருடந் தோறும் நடை பெறும் விசாகத்தில் திருகோணமலை மாவட்டத்தின் எல்லாபக்கங்களிலிருந்தும் மக்கள் கூடுவர்.இங்குள்ள குருந்த மரச்சோலை அழகுவாய்ந்தது.

Wednesday, 23 July 2008

வண்ணமயமான வீதி

இது பலாசுகுமார் வீட்டிலிருந்து யவாரியார் கடை சந்திவரை நீளுகின்ற வீதி.

Tuesday, 22 July 2008

சோழர் கால சிற்பங்கள்

கட்டைபறிச்சான் தில்லங்கேணியில் வைத்து வழிபடப்பட்ட இச் சிலைகள் பின்பு கட்டைபறிச்ச்சான் கும்பத்துமால் ஆலையத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்த்தது.இராஜேந்திர சோழன் காலத்தில் இப் பிரதேசம் அவன் ஆழுகைக்கு உட்பட்டிருந்ததற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.இச் சிலைகள் பற்றி இதனைப் பார்வையிட்ட பேராசிரியர் இந்திரப்பாலா அவர்கள் இதன் புராதனத் தன்மையை உறுதிப்படுத்தியிருந்தார்.


பழமை மிகுந்த கட்டைபறிச்சான் கற்பக வினாயகர் ஆலையம்.

கட்டைபறிச்சான் கற்பக வினாயகர் ஆலையம்.



கல்லம்பார் மாரியம்மன் ஆலையம்

கல்லம்பார் மாரியம்மன் ஆலையம்.
இங்குள்ள மக்களின் நம்பிக்கைகளின் வடிவம்.

கல்லம்பார்


கல்லம்பார் சில காட்சிகள்.

எழில் மிகுந்த கிராமத்தின் காட்சிகள்

கட்டைபறிச்சான் வீதி




சேனையூர் வர்ணகுலப் பிள்ளையார் ஆலையம்.

வரலாற்று சிறப்புமிக்க சேனையூர் வர்ணகுல பிள்ளையார் ஆலையத்தின் எழில் மிகு தோற்றம். பலநூறு அண்டுகள் பழமையானது இக்கோயில்.இலங்கையில் செப்பேடுகள் உள்ள கோயில்கள் சிலவே உள்ளன அவற்றில் இதுவும் ஒன்று.இதுபற்றி பேராசிரியர் க.பாமநாதன் கோணேஸ்வரம் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிபிட்டுளார்.




சேனையூரில் உள்ள கிராமிய வைத்திய சாலை

கிராமிய வைத்திய சாலை அறுபது ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

Monday, 21 July 2008

சேனையூர் சிறீ கணேசா சன சமூக நிலையம்.

சேனையூர் ஸ்ரீகணேசா சனசமூக நிலையம்.ஐம்பதுகளில் ஆரம்பிக்கப் பட்டது.பல சாதனைகள் நிகழ்ந்த இடம்.

மண்ணின் வாசம்

உடையார் வீட்டடியிலிருந்து விரியும் பாதை.


சோலைவனம்

சேனையூர் மத்திய கல்லூரி சந்தியிலிருந்து பிள்ளையார் கோயில் செல்லும் வழி.



சேனையூர் மத்திய கல்லூரி சந்தி

சேனையூர் மத்திய கல்லூரி சந்தி.



மருத நகரூடாக

மருத நகரிலிருந்து சேனையூர் மத்திய கல்லூரி செல்லும் பாதை.




வராகி கோயிலின் பின்னணித்தோற்றம்.